வர இருக்கும் கட்டுரை


குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து கணிப்பொறி உதவியுடன் வாழ்க்கைப்பயணத்தை தொடங்கிவிட்டேன் என்ற எண்ணம் எனக்குள்... ஒருமுறை நான் பனிபுரியும் அலுவலகத்தின் சன்னல் திரையை விளக்கிபார்த்த போது தான் தெரிந்தது... இன்னும் வறுமையின் கரங்களில் சிக்கித்தவிக்கும் மக்கள் வாழும், சாபம் நிறைந்த சமூகத்தில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்று!!!

Saturday 28 June 2014

கட்டுரைகள்



தள்ளுபடி விலையில் மருந்தகங்கள் 
டுமையான விலையேற்றங்கள், தவிர்க்க முடியாத தனியாரின்
விலைநிர்னயக்கொள்கையில் எடுக்கப்பட்ட முடிவு தான் அரசாங்க மே அனைத்து தொழில்களையும் எடுத்து நடத்துதல் என்ற முடிவு இது அனைவராலும் வரவேற்க்க வேண்டியது கடந்த ஆட்சியில் மக்கள் நலன் என்ற பெயரில் வெறும் பலங்களை மட்டுமே கட்டிய பெருமை திரு கருணாநிதிக்கு உண்டு இது பொதுமக்கள் நலனா இல்லை அவரது மக்கள் நலனா என்பது அனைவருக்கும் தெரியும், அதை காட்டிலும் இந்த ஆட்சி நல்ல ஆட்சி என்றே சொல்லலாம்.

அதைப்பற்றி நாம் பேசவும் இல்லை சான்றும் கொடுக்கவில்லை.  மக்கள் நலத்திட்டங்கள் என்று திடிர் திடிர் எனத்தோன்றும் அம்மா காய்கறிக்கடை, அம்மா பல்பொருள் அங்காடி, அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர் தற்போது அம்மா மருந்தகங்கள் என புதிதாக தொடங்கப்படும் இவை மக்கள் நலன் கருதி தொடங்கப்படுகிறதா அல்லது சேவை மனப்பனப்பாண்மையுடன் செயல்படுகிறதா என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.
தற்போது தொடங்கப்பட்டுள்ள மருந்தகள் எந்த விதமான மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் செயல்படும் 10 சதவீகிதம் தள்ளுபடி என்றாலும் கண்டிப்பாக உயர்மட்டத்தில் இருப்பவர்கள் இங்கு வரமாட்டார்கள் அவர்கள் தனியார் மருத்துவமனைகளை நாடித்தான் செல்வார்கள்  நடுத்தரவர்க்கத்தினர் அங்கு சென்றாலும் அடித்தட்டு மக்களுக்கு இந்த மருந்தகங்கள் மூலம் பயன் கிடைக்குமா என்றால் அது நிட்சயம் சாத்தியம் இல்லை.
இவர்கள் அரசாங்க பொதுமருத்துவமனைகளில் இலவசமாக வைத்தியம் பார்க்கும் அடித்தட்டு மக்களும், தமிழக அரசால் தொடங்கப்பட்ட உணவகத்தில் 10 ரூபாய்க்கு மூன்று வேளையும் சாப்பிடக்கூடிய மக்களுக்கு 10 சதவீத கழிவுடன் கூடிய மருந்தகங்கள் பயந்தரக்கூடியது தான் என நியாப்படுத்தும் அரசியல் தலைவர்களிடம் கடந்த 2011ஆம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பிற்க்கு வந்த அ.தி.மு.க வெளியிட்ட அறிக்கையில் உள்ள நலத்திட்டங்களை இன்னும் முழுவதுமாக நிறைவேற்றாத நிலையில் இவர்களின் இந்த முயற்ச்சி யாருக்கு பயன் தரும் என்பதே கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. தமிழக்த்தில் இருக்கும் அனைத்து அரசாங்க பொதுமருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதி இல்லை,அடிப்படை நோய்களான காய்ச்சல் வயிற்று வலி போன்ற வற்றிக்கு தான் இந்த மருத்துவமனைகளில் இன்னும் சிகிச்சைகள் நடந்துக்கொண்டிருக்கிறது உயர் மருத்துவ சிகிச்சைகள் அனைத்துமே தனியார் மருத்துவமனைகளுக்குத்தான் செல்கிறது, இவற்றில் எல்லாம் கவனம் செலுத்தாத தமிழக அரசு இது போன்ற தொழில் துவங்குவதன் மூலம் மக்களின் ஆதரவை தங்கள் வசம் தக்கவைக்கு நோக்கமாவே தெரிகிறது.
உணவகம் மகளிர் சுயஉதவி குழு மூலம் நடத்தப்படுகிறது,
தண்ணீர் தயாரிக்க தொழிற்சாலை உருவாக்கப்பட்டுள்ளது,
உப்பு அதே போல் இயங்குகிறது
Ranbaxy, Dabur, Pfizer, johnsHopkins Baxter, Noartis போன்ற நிறுவனங்கள் தற்போது இந்தியா முழுவதும் மருந்துகள் தயாரித்து விற்பனை செய்துகொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசு இதற்க்கும் தனியாக ஒர் தொழிற்ச்சாலை துவங்க திட்டமிட்டுள்ளதா அல்லது இவர்களிடம் மொத்தமாக கொள்முதல் செய்யத்திட்டமிட்டுள்ளதா, இருந்தாலும்
மெட்ப்ளஸ் அப்போலோ போன்ற மருந்தகங்களில்  10 சதவீதம் கழிவு கொடுக்கப்படும் போது 10 சதவீத கழிவுடன் அரசு மருந்துகங்களிலும் அதே 10 சதவிகிதம் கழிவு கொடுப்பதில் மக்களுக்கு என்ன பயன் இருக்கிறது அவ்வாறு பார்க்கும் போது இது சேவையாக தெரியவில்லை தனியார்துவத்திற்க்கு எதிரான வியாபார நோக்கமாகவே தெரிகிறது. அவ்வாறு   விற்குமானால் பொதுமருத்துவமனைகளில் இலவசமாக கொடுக்கப்படும் மருந்து மாத்திரைகள் எதற்காக? அதை வாங்கும் மக்கள் எப்படி இந்த மருந்தகங்களில் மாத்திரைகள் வாங்கமுடியும் இதை எல்லாம் 1 ரூபாய் இலாபத்திற்க்கு விற்க தமிழக அரசு எந்த அடிப்படையில் செயல்படுகிறது ஏற்கனவே வாங்கிய கடன்தொகை முழுவதுமாக தமிழக அரசு அடைத்துவிட்டதா இதுவும் தோற்றுப்போனால் பால்விலை, பேருந்து விலை யேற்றம் என்று மக்கள் தலையில் தானே வந்து விடியும், இதற்க்கு பதில் தனியாரிடம் கொடுத்து அந்த தொழிற்சாலைகளை அரசின் கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டு தமிழகத்தில் இருக்கும் அத்தியாவசிய பிரச்சனைகளை தீர்க்க வழி செய்யலாமே…

No comments:

Post a Comment