ஐ.டீ, இன்ஜினியரிங் படித்தவர்கள் வருகையால் கலையில் படித்தவர்கள் நிராகரிக்கப்படுகிறார்களா?...
ஐ.டீ (IT InformationTechnology) நம்மில்
பெரும்பாளானோர் படிக்கும் போதே தேர்வு செய்யக்கூடிய துறைகள் அறிவியல்துறை,மருத்துவம்,
இன்ஜினியரிங் துறை தான். ஆனால் கலை மற்றும் அறிவியல் (Arts Group) எடுப்பவர்கள் ஏழானமாகத்தான்
பார்க்கபபடுகிரார்கள். உண்மையைச் சொல்லப்போனால் ஆர்ட்ஸ் படிப்பவர்கள் தங்கள் வாழ்க்கையை
முழுமையாக அனுபவிக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும் அதே சமையம் அதிக வேலை வாய்ப்புகள்
இங்கு தான் இருக்கிறது (சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால்). மருத்துவம், அறிவியல்,
இன்ஜியரிங் போன்ற கல்லூரிகள் இயங்குவது 10 மணி நேரம் காலை 8.00 மணி முதல் மாலை
6.00 மணி வரை படிக்கும் போதும் ஓய்வு இருப்பதில்லை முடித்துவிட்டு வேலைக்கு சென்றால்
அங்கும் 10 முதல் 12மணி நேரம் வரை மாலை வீடு திரும்பியது கலைப்பு வந்தவுடன் சாப்பாடு
தூக்கம் ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கை இப்படி வேலை செய்வதனால் என்ன பயன். அதிகமான பொறுப்பு
அப்போ மற்றவர்களுக்கு பொறுப்பு இல்லையா? என்று கேள்வி வரும் கோபத்தை அடக்கிவிட்டு மேலும்
படிங்க.
ஐ.டீதுறையில் வேலை கிடைத்தவுடன் அதிகசம்பளம்
வேறு என்ன வேண்டும் வாழ்க்கையே பணம் தானே முதலில் என்ன வேண்டும் எங்காவது ஒரு பக்கம்
வீட்டுமனை வாங்க வேண்டும், வீடுகட்ட வேண்டும், கார் வாங்க வேண்டும்,க்ரேடிட் காட் வாங்க
வேண்டும் இவை உடனடியாக கிடைக்க வேண்டுமென்றால் நிறுனம் தங்கள் பணியை நிறந்தரமாக்க வேண்டும்
அதற்க்கு இரவு,பகல் பாராமல் வேலைப்பார்க்க வேண்டும். இதில் பெண்களும் அடங்குவர் இப்படி
பார்த்தால் தான் வங்கி லோன் தரும் ஒட்டு மொத்தமாக எல்லாவற்றிலும் கடன் வாங்கிக்விட்டு
அந்த கடனை அடைக்க முடியாமல் வேலைப்பளு அதிகமாக இருப்பினும் வேறுவழி இல்லாமலும் பலர்
மன உளைச்சலுக்கும் மத்தியில் வேலைக்கு சென்று வருகின்றனர்.
இதற்கிடையில்
கனவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்றால் தான் மொத்த கடைனையும் அடைக்க முடியும் என்ற
நெருக்கடி வேறு என்ன செய்வது கட்டாயத்தின் பெயரில் வேலைக்கு செல்லும் பெண்கள் சந்திக்கும்
இன்னல்கள் வேறு. பல நிறுவனங்களில் குறித்த நேரத்திற்க்கு உள்ளே செல்லவில்லையென்றால்
சம்பளத்தில் பிடிப்பு (fine) போடப்படும் அல்லது அவர்களது பதிவி உயர்வுக்கு தடையாகும்
வகையில் மதிப்பீடு குறைக்கப்படும். ஆனால்
பணி
முடிந்து
வெளியே
எப்போது
வருவார்கள்
என்று
சொல்ல
முடிவதில்லை.
10
முதல் 12மணி நேரம் வரை வேலை செய்யும் இவர்கள் குறித்த நேரத்தில் வெளியே அனுப்படுவதில்லை.
சரியான
நேரத்திற்க்கு உணவு என்பது கேள்விக்குறி தான். அங்கு கிடைக்கும் ஏதோ ஒன்றை பீட்சா,
பர்கர், சான்வெஜ் போன்றவற்றை சாப்பிடுகிறார்கள் இதை சாப்பிடுவதன் மூலம் அவர்கள் எடை
கூடும் பின் நாட்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை சிறிதும் மனத்தில் கொள்ளவேண்டிய
அவசியம் இல்லாதது போலத்தான் இவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் பாதியை மருத்துவர்களுக்கு
கொடுக்கவும் தயாராகத்தான் இருக்கிறார்கள் போல் தெறிகிறது.
கை நிறைய
சம்பளம்
கிடைக்கின்றதே
என்பதற்காக
பலர்
இத்துறையில்
தங்களது
பெரும்பாலான
சந்தோஷத்தை
இழந்து
தவிக்கின்றனர்
என்பதுதான்
உண்மை.
தங்கள்பிள்ளைகளிடமும்
உற்றார்
உறவினர்களிடமும்
கூட
நேரத்தைசெலவழித்து
மகிழ்ச்சியாக
இருக்க
முடியவில்லை
என்பது
தான் நிதர்சனமான உண்மை.
இது போன்றவர்களுக்கு விரைவிலேயே மனஅழுத்தம் வந்து விடுகின்றது. இந்த துறைகளில் வேலைப்பார்ப்பவர்கள் அதை ஐடீ மற்றும் இன்ஜியரிங் துறையை விட்டுவிட்டு கலை& அறிவியல்துறை சார்ந்த கனிதம்,ஊடகம்,நிருவன நிர்வாகம் போன்ற வேலைக்களுக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர் இதனால் இதற்காகவே படித்துவிட்டு அங்கு பணியில் இருப்பவர்களுக்கு நிரந்தரமான வேலை இல்லை என்று சொல்லும் அளவிற்க்கு உருவாகியுள்ளது.
பல வேலைகளுக்காகவே படித்துவரும் இளைஞர்களின் நிலை கேள்விக்குறியாகும் நிலை தான்.
நானும்
உட்பட?
ஐடி துறையில் வேலை ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான வேலையில் இருப்பது என்பது 'வரம்' என்று சொல்வதை விட 'சாபம்' என்று தான் சொல்ல வேண்டும்.
இருப்பினும் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை
படிப்பின் மூலம் தான் தேர்வு செய்கிறோம் அது பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அதிலேயே
முயற்சி செய்து அவரவர் வாழ்க்கையின் வெற்றிக்கு வித்திடலாமே…
No comments:
Post a Comment