வர இருக்கும் கட்டுரை


குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து கணிப்பொறி உதவியுடன் வாழ்க்கைப்பயணத்தை தொடங்கிவிட்டேன் என்ற எண்ணம் எனக்குள்... ஒருமுறை நான் பனிபுரியும் அலுவலகத்தின் சன்னல் திரையை விளக்கிபார்த்த போது தான் தெரிந்தது... இன்னும் வறுமையின் கரங்களில் சிக்கித்தவிக்கும் மக்கள் வாழும், சாபம் நிறைந்த சமூகத்தில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்று!!!

Wednesday 26 December 2012

மார்கழி மாத வீதி உழா

அதிகாலைக் 4ங்கு மணிக்கு குளிரில் குளித்து, மார்கழி பஜனையை பார்ப்போம் என்று  வந்தால், அகல் விளக்குகள் கார்த்திகை தீபம் போல,

மாட வீதி பஜனை பார்க்கப் போனால், பாதி இருட்டில் கம்பீரமாகத் தெரியும் கோயில் கோபுரம் - நினைத்தாலே சிலிர்க்கிறது. கடந்த சில வருடங்களாக, இயற்க்கை நியதிக்கப்பாற்ப்பட்டு, மார்கழியில் சில நாட்களில் மழை பின்னியது. ஆனால், மழையோ, குளிரோ, பனியோ- விடாது 30 நாட்களும் நான்கு மாட வீதியைச் சுற்றி வரும் பஜனை அன்பர்களோ தவறாமல் வந்து விடுகிறார்கள். அவர்களுக்கும் ஆபீஸ், குடும்பம் இத்யாதி பிடுங்கல்கள் உண்டு- ஆனால் சளைப்பதில்லை.

இதில் இளைஞர்களும்,பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுடய சின்ன மாமிகளும் அடக்கம். பஜனைக்கு நடுவே சற்றே ஒதுங்கி அப்பப்போ, ஆண்ட்ராயிடைத் தொட்டு மெயில் பார்க்கும் இளைஞர்களையும், கணவனிடம் குழந்தைக்கு பிஸ்கட் வைக்க ஞாபகப் படுத்தும் இளம் அம்மாக்களையும் அவர்களின் உறுதியையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இந்த முப்பது நாட்களும் தவறாமல் பஜனை நடத்துவதும் ஒரு கூட்டு முயர்ச்சிதான். பஜனைத் தலைவரிலிருந்து, தம்புரா- ஹார்மோனியம் போடுபவரும், நடு வழியில் காய்ந்து போன தொண்டைக்கு சூடான பால் தரும் அன்பரும், பஜனை முடிந்தவுடன் ஆகாய மார்க்கமாக வரும் ராவணன் போல் காரில் வந்து மனைவியை அவசரமாகக் கொத்திச்செல்லும் கணவர்களும்  - எல்லாருமே முக்கியமானவர்கள்தான்.!

வளர்ந்து வரும் மேல் நாட்டு மோகங்களையும், போன வருடம் கல்யாணம் பண்ணி இந்த வருடம் முடித்து வைக்கும் மக்களையும்  நினைத்துக் கவலைப் பட்டாலும், இவர்கள் நம்பிக்கையூட்டுகிறார்கள்.





எனக்குத் தெரிந்து மார்கழி காலைக்கு ஏற்ற இடங்கள் மைலாப்பூர் மாட வீதி, கபாலி கோயில் மற்றும் ஸ்ரீரங்கம். திருப்பாவை அருளிய ஸ்ரீவில்லிபுத்தூர் போக ஆசை.