ஏப்ரல் 1 மட்டுமா
முட்டாள்கள் தினம்…
|
இன்று
ஏப்ரல் ஒன்றாம் தேதியாம், ஏப்ரல் 1ம் தேதி முட்டால்கள் தினமாம், விடிந்ததும் நம்மை
ஏமாற்ற கங்கனம் கட்டிக்கொண்டு காத்திருப்பவர்களை நாம் முந்திக்கொண்டு முட்டாள்களாக
வேண்டும். இன்று ஒருநாள் ஏமாந்து விட்டால் வருடம் முழுதும் ஏமார்ந்து கொண்டே தான் இருப்போம்.
இதனை நினைத்தால் சிரிப்பதா இல்லை நீங்கள் வருடத்தில் 364 நாட்களும் ஏமாறுவதே இல்லையா
என்று நக்கலாக கேள்வி கேட்பதா என்று தெரியவில்லை.
ஏன்
இந்த நாளை மட்டும் குறிப்பாக முட்டால்கள் தினம் என்கிறோம் … கேள்வி எழுந்தது ஆனால்
பதில் கிடைக்கவில்லை. சரி யாரிடம் கேட்பது இணையத்தை மொய்த்து பார்த்தேன் அந்த காலத்தில்
ஒருவரை மனதலவில் எத்தைய வலிமையுடையவர், புத்தி அலைபாய்ந்து கொண்டிருக்கிறதா என்பதை
சோதிக்க அவர்களுடன் இருப்பவர்களே கண்ணை மூடி யார் என்று கண்டுபிடிக்க சொல்வது முதுகுக்கு
பின் சாயங்களை அடித்து ஏமாற்றுவது என மனிதர்களை மனிதர்களே சோதித்து கொண்டனராம்.
ஆனால்,
காலம் மாறிவிட்டதல்லவா பொழுதுபோக்கு மனிதர்களுக்குள் பொழுது விடிந்தால் பொய் பொறாமை,
ஏமாற்று, சித்து வேளைகளாக மாறிவிட்டது.
சுமார்
நினைத்துப்பார்ப்போம் பக்கத்துவீட்டுக்காரரிடம் பந்தா காட்ட வேண்டும் என்பதற்காக
500 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு டி நகரில் உள்ள பெரிய ஏசி சோருமில் 1200 கொடுத்து ஒரே
ஒரு சர்ட் வாங்கிட்டு வெளியே வருவோம் பக்கத்தில் இருக்கிற பிளாட்பார்ம் கடையில அதே
டீ சர்ட் 250 ரூபாய்க்கு வித்துகிட்டு இருப்பான் கேட்டால் சோருமில் இருப்பது பிராண்டட்
சொல்லி நாம் அடைந்த ஏமாற்றத்தை மெச்சிக்குவோம். தினமும் காலையில் எழும் போதே டிவில
நடிகை ஒருவர் கோயம்பேட்டில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் அறை மணி நேரத்தில் நந்தா
சிட்டி பக்கத்தில் பஸ் வருது, எதுத்தாப்ல ஏர்போட் இருக்கு, பக்கத்துல பள்ளிக்கூடம்
இடம் வாங்கினா கொடம் குடுக்குறோம் சொல்லி கூப்பிடுறாங்க அவங்க கூட போனா திருச்சி சமயபுரம்
பக்கத்துல கொண்டு போய் நிறுத்தி இது தாங்க நாங்க சொன்ன இடம்னு பக்காவா தலையில கட்டி
அனுப்புவாங்க அதையும் வாங்கி ஏமாறுபவர்கள் பலர்.
தினம்
தினம் தொலைக்காட்சிலையும், நீயூஸ் பேப்பர்லையும் பக்கம் தவறாம செய்திகள் வரும் சீட்டு
நடத்தி மக்களை ஏமாற்றி பல கோடி சுருட்டல் மக்கள் கண்ணீர்னு அதப்படிச்சிட்டு அடுத்த
தெருவுல புதுசா ஆரம்பிச்ச சீட்டு கம்பெனில பணத்த போட்டு ஏமாறுவது வழக்கம் தானே அதிகம்.
ஏமாற்றுபவர்களை விட ஏமாறுபவர்கள் தான் முட்டால்கள் என்று தமிழ் சினிமா ஒன்றில் சொல்ல
கேட்டிருக்கிறோம் பார்த்திருக்கிறோம் ஆனால், விழித்திருக்கிறோமா என்பது கேள்வி குறிதான்.
ஏமாற்றுபவர்களை
கண்டால் கோபமும் ஆத்திரமும் வருகிறது. அப்பாவிகளை எத்திப்பிளைப்பு நடத்தும் கேடுகெட்டவர்களை
நடுரோட்டில் நிற்க வைத்து சாட்டையால் அடித்தால் கூட ஏமாந்தவர்களின் ஆத்திரம் தீராது.
பாட்டிக்காட்டில் 10 கிளாசு முடிச்சிட்டு விவசாயம் பார்த்து நிம்மதியா நாளை கழித்துக்கொண்டிருப்பவனிடம்
பணத்தாசையை காட்டி சுயலாபத்திற்காக வெளிநாட்டு மோகம் காட்டி மனைவியின் தாலி முதல் தாயிடம்
இருக்கும் கடைசி மோதிரம் வரை சேட்டிடம் விற்று ஏமாறுகிறோம். அவன் படிக்காதவன் சரி எம்பிஏ
வரை படித்துவிட்டு சோறு போட்ட நிலத்தை விற்று பெத்தவர்களை ரோட்டில் விட்டு பணத்தை கொண்டு
ஏஜெண்டிடம் கட்டிவிட்டு ஏதோ எதுக்கோ காத்துக்கிட்டிருக்கிற மாதிரி தினம் தினம் செல்போனை
பார்த்துக்கொண்டிருக்கும் இளசுகள்
கோழிமுட்டைக்கு
1000 என்று கூறிய கோமாளிகளிகளிடம் வரிசையில் நின்று கோட்டை விட்டு கோழிகளுக்கும் தீவனம்
கிடைக்காமல் வாங்கிய கடனுக்கு வழி தெரியாமல் திண்டாடும் அறிவாளிகளாகவா
மகனை பெரிய காலேஜ்ல சேர்த்துவிட்டோம் இனி அவன் பெரிய
இஞ்ஜினியர், டாக்டர், கலெக்டர்னு என்னி பூரிச்சு போகும் பெற்றோர்களை ஏமாற்றும் நம்
எத்தனை பேர். செல்போனில் பேசிக்கொண்டிருக்கும் மகள் யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறாள்
என்றே தெரியாமல் செல்போனில் பேசுவதை நினைத்து பூரிப்படைந்து ஏமார்ந்து கிடக்கும் தாய்
தந்தைகள் எத்தனை பேர். தேர்தல் நேரத்தில் மட்டும் தொகுதியில் சந்துபொந்துகளிலெல்லாம்
இருக்கும் வீடுகளை தேடித்தேடி வந்து வாக்கு கேட்கும் அரசியல்வாதிகளையும் அவர்களின்
வாக்குறுதிகளையும் நம்பி வாக்களித்து வெற்றி பெறச்செய்துவிட்டு, அவர் சொகுசுக்காரில்
கருப்புக் கண்ணாடியை கூட இறக்கிவிடாமல் போவதை பார்த்து எமார்ந்து நிட்க்கிறோம். குடும்பம்
நடுத்தெருவில் இருப்பதை கண்டு கொள்ளாமல் கட்சி கட்சி தலைவர் என்று தெருத்தெருவாய் திரியும்
போஸ்ட்டர் ஒட்டி தலைவனுக்காக தீக்குளிக்கவும் தயாராக இருக்கும் தொண்டனுக்கு ஒன்றுமே
இல்லை நேற்று வந்த மகராசிகளுக்கு துனைத்தலைவர் பதவி என்றால் இதில் முட்டால் யார்..
கவர்ச்சியான
விளம்பரத்தை பார்த்து குழிக்க பயண்படுத்தும் சோப்பு முதல் தலை சீவ பயன்படுத்து சீப்பு
வரை எமாற்றம். நீதி கிடைத்துவிடும் என்று நம்பிக்கையில் நீதிபதியையும், போலீஸ்சிடம்
போனால் பிரச்னை தீர்ந்துவிடும் என்று நம்பி இலவு காத்த கிழி போல் காத்துக்கிடக்கிறோம்.
கொள்ளையடிக்கிறான்
என்று தெரிந்தே பிரோவில் பணத்தை வைத்துவிட்டு வெளியூர் செல்வோம். அண்ணன் சொத்துக்கு
ஆசைப்பட்டு இருக்கும் சொத்தையும் இழந்தவிட்டு புலம்புவது. இதனால் நாம் திறமைசாளிகள்
என்பது பொருள் அல்ல தூங்கிக்கொண்டிருக்கும் போதும் கால் கட்டை விரலை ஆட்டிக்கொண்டு
தான் துங்க வேண்டும். திறமைசாளிகளாக இருப்பதை விட அறிவாளிகளாகவும் இருப்பது எதிர் கால
வாழ்க்கைக்கு அவசியமானது.
ஆகவே,
இந்த எப்ரல் 1 முட்டால்கள் தினமாகவே இருக்கட்டும் இருக்கட்டும் இனி வரும் நாட்களில் முட்டால் என்ற பெயரை மட்டும் மறைந்து போக செய்வோம்.
கோபி…