வர இருக்கும் கட்டுரை


குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து கணிப்பொறி உதவியுடன் வாழ்க்கைப்பயணத்தை தொடங்கிவிட்டேன் என்ற எண்ணம் எனக்குள்... ஒருமுறை நான் பனிபுரியும் அலுவலகத்தின் சன்னல் திரையை விளக்கிபார்த்த போது தான் தெரிந்தது... இன்னும் வறுமையின் கரங்களில் சிக்கித்தவிக்கும் மக்கள் வாழும், சாபம் நிறைந்த சமூகத்தில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்று!!!

Sunday 5 May 2013




37 ஆண்டு சோழர்கள் கட்டமைப்பு!!!




37-வது அகவையில் கால் பதிக்கிறது புதிய தமிழ்ப் புலிகள்” அதாவது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம்”. இவர்கள் இல்லை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டார்கள் என்று சொல்லும் வாய்களின் மனதில் நீங்காத அச்சத்தினை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது இன்றும்.
     இலங்கை என்னும் சிறிய தீவில் சிங்கலவனுக்கு அஞ்சி சொந்த மண்ணில் தங்களின் வாழ் நாளில் மிகுதியை உயிருக்கு போராடி, போராடி சாவையே சகித்து கொண்டபடி கண்ணீருடன் வாழ்ந்த தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கச்செய்தது தான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு தனி மனிதனின் முயற்சி கடந்த 35 ஆண்டுகளாக பல ஏமாற்றங்கள், துரோகங்கள், வெளிநாடுகளின் தந்திரப்பேச்சுகள் என எதற்கும் அடிபனியாமல் ஓரு போது தன்னை நம்பிய தமிழின மக்களுக்கு தன்னால் துரோகம் செய்யமுடியாது ஒரு அரசாங்கத்தினை எதிர்த்து எந்த வித அரசு உதவியும் இல்லாமல் தனிப்பட்ட அரசாங்கத்தினையும், அவர்களின் பாதுகாப்பில் தமிழீழ தேசத்து மக்கள் எந்த குறையும் இல்லாமல் அவர்களை வழி நடத்திய பெருமையும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்க்கு மட்டுமே உண்டு, விடுதலைப்புலிகள்    என இறுதி வரை  போராடிய  இன்று தன் குடும்பத்தை இழந்த ஒரு மிகப்பெரிய தலைவர் என்றே சொல்லாம்.

  • பிரபாகரன் என்பவர் யார்? அவர் தமிழீழ மக்களுக்கு என்ன செய்தார்? அவரின் அரச கட்டமைப்பு எப்படி செயல்பட்டது? லஞ்சம் இல்லை ஊழல் இல்லை இருப்பினும் ஒரு தனி நாடாக செயல்பட்டது.. அவரைப்பற்றியும் இயக்கத்தினைப் பற்றியும் எனக்கு தெரிந்தவை? கேட்டதும்,படித்ததும்… 
                         1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17-வது வயதில், “புதிய தமிழ்ப் புலிகள்என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடங்கினார்.

      அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள்புதிய தமிழ்ப் புலிகள்என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ஒரு பெரிய இராணுவமாக உருவாக்க முடிவெடுத்து, “தமிழீழ விடுதலைப்புலிகள்அமைப்பை (LTTE) 1976-ம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி தொடங்கினார். தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தை தனது சிறந்த கட்டுப்பாடான நெறிப்படுத்தலினாலும், தனது அயாரத உழைப்பாலும், தமிழ் மக்களின் ஆதரவாலும் மிகப் பெரிய அமைப்பாக மாற்றினார்.

      தமிழர்களுக்கென தனியான ஒரு தேசத்தையும், அதற்கான அரச கட்டமைப்பும் திறம்பட வைத்து, உலகின் பார்வையைத் தம்மகத்தே மூன்றாவது ஈழப் போரின் போது திருப்பிய தமிழீழ விடுதலைப்புலிகள் உலக படை வரலாற்றில் பல நிகழ்வுகளிற்கு முன்னூதாரணமாகத் திகழ்ந்தார்கள். உலக வல்லரசுகளின் இராணுவப் படிமுறைகளிற்கும் வரையறைகளிற்கும் சவாலாக விளங்கிய பல சிறந்த தாக்குதல்களின் மூலம் உலகின் பார்வையைத் தம்மகத்தே திருப்பிய விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் ஓயாத அலைகள் தாக்குதல்கள் போராட்டத் தந்திரோபாயங்களையெல்லாம் புரட்டிப் போட்ட மரபு வழித் தாக்குதலாக உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.

      அத்தோடு எதிரி உச்சவிழிப்பில் இருந்து எதிர்பார்த்துக் காத்திருந்த ஆனையிறவு இராணுவத் தளம் மீதான முப்பரிமாணத் தாக்குதலை தமது திட்டமிடலின்படியே நடத்தி மூன்று மாத காலத்தில் படைகளை அகற்றி உலகில்
      தமக்கெனத் தனி அங்கீகாரம் பெற்றார்கள் விடுதலைப்புலிகள்.    அத்தோடு பல முறியடிப்புச் சமர்கள் குறிப்பாக யாழ். தேவி முறியடிப்புச் சமர், சூரியக்கிரன முறியடிப்புச் சமர், ஜெயசிக்குறு எதிர்ச்சமர், தீச்சுவாலை முறியடிப்புச் சமர் என பல முறியடிப்புச் சமர்களின் மூலம் தமது தற்காத்தல் போராட்ட முறையை உலகிற்குப் பாடவிதானமாக்கிய விடுதலைப்புலிகளின் ஜெயசிக்குறு எதிர்ச்சமர் 18 மாதங்களாக நீடித்த ஒரு பாரிய சமராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டதுமுப்படைகளையும் அதற்கான சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுமாணத்தோடு உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் அவற்றிற்கான தனிச்சீருடைகள், முகாம்கள் என அவற்றைப் பராமரித்ததோடு அவற்றின் சண்டையிடும் திறன் மூலம் இந்தியப் பிராந்தியத்திற்கே படைபல அச்சமேற்படுத்தும் படையணிகளாக அவற்றை சிறீலங்கா மற்றும் அவற்றின் நேச நாடுகள் நோக்குமளிவிற்குப் பேணிப் பாதுகாத்தனர்.
      இராணுவப் படைக் கட்டுமாணத்தின் கீழ் பல சிறப்புப் படையணிகளைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் ஜெயந்தன் படையணி, சிறுத்தைப் படையணி, மகளீர் படையணி, சார்லஸ் அன்ரணிப் படையணி, மோட்டார்ப் படையணி, ஆட்லறிப் படையணி, டாங்கிப் படையணி என இன்னும் பல பிரிவுகளையும் திறம்படச் செயற்படுத்தி வந்தனர். குறிப்பாக ஈழப் போர் நான்கில் தமிழீழ தேசப் படையணிகள் முழுப் பரிமாணம் பெற்றதற்கான அடையாளமாக உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வான்புலிகளின் தோற்றமும் அவற்றின் செயற்பாடும் மிக நேர்த்தியான தாக்குதல்கள், உச்ச இலக்குகள், இலாவகமாகத் திரும்பித் தளமடையும் செயற்திறன் என ஒரு வான்படைக்கான அங்கீகாரத்தை அதற்கு வழங்கியிருந்தது.

      போராட்டத்தின் பெயர் சொல்லவல்ல 70-க்கும் மேற்பட்ட சிறந்த தளபதிகளைக் கொண்டிருந்தார்கள் தமிழீழ விடுலைப்புலிகள். பல வல்லாதிக்க சக்திகளின் ஆதரவு இன்றி சிங்கள இனவாத அரசை எதிர்கொண்டு போராடினார்கள். ஆயுதங்களை மௌனிப்பதாக முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் அறிவிக்கும்வரை கொண்ட கொள்கை மீதான பற்று உறுதியுடன் போராடிய தமிழர்களின் போராட்ட சக்தி தோற்றம் பெற்ற நாள் தமிழர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான நாளாகும்.
     தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நிர்வாகத்தின் கீழ் இயங்கியக்கப்பட்ட முக்கிய தளங்கள் இவை:

    01. இராணுவம்

    02. கடற்புலிகள் நீரடி நீச்சல்    பிரிவு  
           03. வான்படை
    04.
    கரும்புலிகள்
    05.
    அரசியற்துறை அரசியல்துறைபரப்புரைப் பிரிவு.
    06.
    புலனாய்வுத்துறை
    07.
    வேவுப்பிரிவு
    08.
    ஒளிப்பதிவுப் பிரிவு
    09.
    மருத்துவப் பிரிவு
    10.
    கணணிப் பிரிவு
    11.
    மாணவர் அமைப்பு

    12. தமிழீழ வைப்பகம்
    13.
    தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
    14.
    அனைத்துலகச் செயலகம்
    15.
    சுங்கவரித் துறை
    16.
    தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்
    17.
    தமிழீழப் படைத்துறைப் பயிற்சிப் பள்ளி
    18.
    அரசறிவியற் கல்லூரி
    19.
    தமிழீழக் காவற்துறை காவல்துறைகுற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறைகுற்ற புலனாய்வுப் பிரிவு
    20.
    வன வளத்துறை
    21.
    தமிழீழ நிதித்துறை
    22.
    விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம்
    23.
    தமிழீழ சட்டக்கல்லூரி, தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்
    24.
    தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை
    25.
    காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகள்)
    26.
    செந்தளிர் இல்லம் (5 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள்)
    27.
    செஞ்சோலைச் சிறார் இல்லம் (ஆதரவற்ற பெண் குழந்தைகள்)
    28.
    வெற்றிமனை (வலுவிழந்தோர்)
    29.
    அன்பு இல்லம் (முதியோர்களுக்காக)
    30.
    பொத்தகசாலை
    31.
    விடுதலைப் புலிகள் செய்தி இதழ்
    32.
    ஈழநாதம் செய்தி இதழ்
    33.
    வெளிச்சம் செய்தி இதழ்
    34.
    ஆவணப்படுத்தல்-பதிப்புத்துறை
    35.
    தமிழீழ தேசியத் தொலைக்காட்சி
    36.
    நிதர்சனம்
    37.
    புலிகளின் குரல் வானொலி
    38.
    மாவீரர் பணிமனை
    39.
    நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கான)
    40.
    மயூரி இல்லம் (இடுப்பின்கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)
    41.
    சேரன் வாணிபம்
    42.
    சேரன் சுவையகம்
    43.
    பாண்டியன் உற்பத்திப் பிரிவு
    44.
    பாண்டியன் வாணிபம்
    45.
    பாண்டியன் சுவையூற்று
    46.
    சோழன் தயாரிப்புகள்
    47.
    வழங்கற் பிரிவு
    48.
    சூழல் நல்லாட்சி ஆணையகம்
    49.
    நிர்வாக சேவை
    50.
    ஆயுத ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் பிரிவு
    51.
    மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு
    52.
    திரைப்பட வெளியீட்டுப்பிரிவு, மொழியாக்கப்பிரிவு
    53.
    பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்
    54.
    தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித் துறை
    55.
    தமிழீழ விளையாட்டுத்துறை
    56.
    தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்

          இவை அனைத்து கட்டமைப்புகளும் இன்று இல்லை 35 வருடத்தின் போராட்டம் 9 நாடுகளின் பசிக்கு இறையானது. மீண்டும் எழுவதற்க்கு பிரபாகரனைப்போல ஆயிரம் ஆயிரம் உண்மையான தமிழனாக வெளிவருவார்களா?.......