வர இருக்கும் கட்டுரை


குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து கணிப்பொறி உதவியுடன் வாழ்க்கைப்பயணத்தை தொடங்கிவிட்டேன் என்ற எண்ணம் எனக்குள்... ஒருமுறை நான் பனிபுரியும் அலுவலகத்தின் சன்னல் திரையை விளக்கிபார்த்த போது தான் தெரிந்தது... இன்னும் வறுமையின் கரங்களில் சிக்கித்தவிக்கும் மக்கள் வாழும், சாபம் நிறைந்த சமூகத்தில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்று!!!

Saturday, 31 August 2013

வாழ்வழிக்கும் மெரினா

மெரீனா கடற்கரை. பலருக்கு வாழ்வு கொடுக்கின்றது. இன்று அந்தத் கடற்கரையில் வாழ்வைத் தேடியலையும் இரு பிஞ்சுகளைச் சந்தித்தேன். ஒருவனுக்கு 5 வயது மற்றையவனுக்கு 4 வயதிருக்கும். 5 வயதுக்காரன் அவனிடம் இருக்கும் சுண்டலை வாங்கிக்கொண்டு 10 ரூபா தரும்படி கெஞ்சினான். வாங்கிக் கொண்டேன். 4 வயதுக்காரன் வாங்கிய சுண்டலை தரச் சொல்லி கெஞ்சினான் அதையும் கொடுத்து விட்டேன். வாழ்க்கை கற்றுக் கொள்ள இந்தக் கடற்கரையில் எவ்வளவு வைரங்களை வைத்திருக்கின்றது.. என் அம்மா, அப்பாவை நினைக்க பெருமையாய் இருக்கின்றது
வாழ்க்க அப்படிதான்!!!!!!!!

இனியன்...

No comments:

Post a Comment