வர இருக்கும் கட்டுரை


குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து கணிப்பொறி உதவியுடன் வாழ்க்கைப்பயணத்தை தொடங்கிவிட்டேன் என்ற எண்ணம் எனக்குள்... ஒருமுறை நான் பனிபுரியும் அலுவலகத்தின் சன்னல் திரையை விளக்கிபார்த்த போது தான் தெரிந்தது... இன்னும் வறுமையின் கரங்களில் சிக்கித்தவிக்கும் மக்கள் வாழும், சாபம் நிறைந்த சமூகத்தில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்று!!!

Saturday, 31 August 2013


சூதுகவ்வும் திரைவிமர்சனம்

இன்று நண்பர்களுடன் சூது கவ்வும் படம் பார்த்தேன். இந்ததிரைப்படத்தின் பெயரே ஒரு த்ரில் கதை என அனைவரையும் நினைக்க வைக்கிறது. ஆனால் ஒரு காதல் கதை.. 4 டூயட்டுகள்.. ஒரு குத்துப் பாட்டு.. ஒரு சோகப் பாட்டு.. 3 பைட்டுகள்
என மொக்கையாக போகும் படங்களுக்கு மத்தியில் பெரிய ரசிப்பே படத்தில் நடித்தவர்களின் கேரக்டர் ஸ்கெட்ச்சுதான்..! நயன்தாராவுக்கு கோவில் கட்டிவிட்டு சென்னைக்கு ஓடி வரும் இளைஞன்.. குளித்து முடித்து பவ்யமாக காலையிலேயே கட்டிங் போட அமரும் இன்னொரு இளைஞன்.. ஐடியில் பணியாற்றியும் வேலை கிடைக்காத தருணத்தில் இவர்களோடு கூட்டணி வைக்கும் ஒரு இளைஞன்.. இவர்களையும் தாண்டி மனதில் நிற்கிறார் விஜய் சேதுபதி முழுகதையையும் சொல்ல முடியாது மொத்ததில் அனைவரின் வயிருகளையும் வழியுடன் கவ்வ வைக்கிறது இந்த சூதுகவ்வும்

அறிமுக இயக்குநர் நலன் குமரசாமியின் குறும்படங்களில் இயக்கத்தைவிடவும் கேரக்டர் ஸ்கெட்ச்சுகளையே அதிகமாக வடிவமைத்திருந்தார்.. அதுபோலவே இதிலும்.. தனது முதல் படத்திலேயே ஹிட்டடித்திருக்கும் இவரது அடுத்தடுத்த படைப்புகளும் ஜெயிக்க எமது வாழ்த்துக்கள்...........


No comments:

Post a Comment