வர இருக்கும் கட்டுரை


குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து கணிப்பொறி உதவியுடன் வாழ்க்கைப்பயணத்தை தொடங்கிவிட்டேன் என்ற எண்ணம் எனக்குள்... ஒருமுறை நான் பனிபுரியும் அலுவலகத்தின் சன்னல் திரையை விளக்கிபார்த்த போது தான் தெரிந்தது... இன்னும் வறுமையின் கரங்களில் சிக்கித்தவிக்கும் மக்கள் வாழும், சாபம் நிறைந்த சமூகத்தில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்று!!!

Saturday, 31 August 2013

பாரபட்சம் எதற்க்கு தமிழக அரசிற்க்கு

சென்னை மாநகரில் உள்ள பல இடங்களின் சுவற்றீல் நமது பாரம்பரிய வரலாற்று ஒவியங்கள் வரையப்பட்டுள்ளன அதனை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்வு தருகிறது ஆனால் இவை பராமரிப்பில் இல்லை என்பது தான் மன வருத்தம் அதில் ஒன்று தான் இந்த அன்னாநகரில் உள்ள அன்னா கோபுர புங்கா முன்னாள் முதல்வர் திரு.மு.கருனாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு பெரியவர்களுக்கு பொழுதுபோக்க ஏதும் இல்லாவிட்டாலும். இங்கு உள்ள மரம் செடிகளின் அசைவினால் வரும் ஓசை மனதிட்க்கு மிகவும் அமைதியை தருகிறது எனினும் இங்கு வரையப்பட்டுள்ள ஒவியங்களை பார்க்கும் பொழுது ஏதோ வரலாற்றை சொல்வது போல இருக்கிறது. இதனை பராமரிப்பவர்கள் ஏன் இந்த ஒவியம் சுவற்றில் இருந்து விழும் வரை காத்திருக்க வேண்டும்.

இனியன்

No comments:

Post a Comment